- ஸ்ரீ பரப்பிரம்ம துவாதச பீஜாக்ஷ்ரசக்தி பீடம் - செல்லப்பிராட்டி
- பீஜாட்சர எழுத்துக்கள் குறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது.
- உலக அன்னை ஆதிபராசக்திக்கு உண்டான மந்திரத்தின் சூட்சம எழுத்துக்கள் அவை.
- இவ்வாலயத்தின் அஷ்ட பூதங்கள் எனும் 1. வெளி (ஆகாசம்) 2. வளி (காற்று) 3. தீ (நெருப்பு) 4. நீர் 5. நிலம் 6. ஒளி 7. ஒலி 8. காலம் ஆகிய எட்டு பூதங்களும் இணைந்த சக்திதான் காலமா சக்தி அல்லது பிரம்ம சக்தி ஆக இவ்வாலய மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த காலப்பிரம்மம் அல்லது பிரம்ம சக்தியைத்தான் சங்ககால சிற்ப சித்தன் மாமுனியன் மயன் என்பவர் காலமாக்கடவுள் என பிரணவ வேத நூலில் கூறியிருக்கின்றார்.
- மயன் கூற்றுப்படி சொல்லெல்லாம் ஓவியமே எழுத்தெல்லாம் ஓவியமே என்பதற்கேற்ப செல்லப்பிராட்டி கிராமத்தில் ஆலயக் கருவறையில் கற்பலகையில் அமைந்துள்ள பீஜாட்சர எழுத்துக்களின் காலம் மயன் வாழ்ந்த காலத்திற்கும் முந்தியது.
- பார்வதி ( காலம் - TIME - காலப்பிரம்மம் )
- லக்ஷ்மி ( ஒளி - light - அர்த்தப்பிரம்மம் )
- சரஸ்வதி ( ஒலி - sound - நாதப்பிரம்மம் )
- இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக - பரப்பிரம்ம சக்தி (பரம்பொருள்) - அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்மன் அருள் பாலித்து வருகிறாள்.
- என்னவெல்லாம் வேண்டி வழிபடுகின்றோமோ அதற்கான அருளைத்தரும் ஆற்றல் படைத்த கௌரவமான தேவதை ஸ்ரீ அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்மன்.
- இராமாயண யுகத்தில் வழிபட்ட சிறப்பு மிக்க தலம். இவ்வாலயம் தரிசனம் செய்வதன் பொருட்டு அதிசயமும், அற்புதமும் நிகழ்வது திண்ணம்.


சர்வம் சக்தி மயம்
அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் ஆலய பாமாலைகள்
லலிதா பாமாலைகள்
விநாயகர் பாமாலைகள்
முருகனின் பாமாலைகள்
ஆலயத்தின் சிறப்புகள்
நான்கு யுகங்களில் முதன்மையான கிரேதாயுகத்தில் இராமாவதாரம் ஜெனிக்க, தசரத மகாராஜாவுக்கு புத்திர காமேஸ்டியாகம் செய்வித்த கொம்புமகரிஷி எனும் ரிஷிய ஷிங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்தலம்
ரிஷிகளால் பூஜிக்கப்பட்டது என்பதன் அடையாளமாக உருவ வழிபாடு இன்றி கற்சிலையில் ( 4 x 2 அளவுள்ள கற்பலகையில் ) அவர்களின் வழிபாட்டு முறைகளான மந்திர எழுத்துக்களை அடையாள முத்திரைகளாக 12 கட்டங்களில் பதித்தும், சூரியன், சந்திரன் மற்றும் சூலாயுதம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆலய தகவல் பலகை
- ஸ்தலம்:
- செல்லப்பிராட்டி, செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
- மூலவர்:
- ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன்
- சிறப்பு சன்னதிகள்:
- ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சூலினி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ எல்லை பிடாரி, ஸ்ரீ சப்த கன்னியர், ஸ்ரீ அம்மச்சார், ஸ்ரீ வனதுர்கா மற்றும் ஸ்ரீ வேடியப்பன்
- அமைவிடம்:
- சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் செஞ்சிக்கு அருகில் (வளத்தி வழியாக மேல்மலையனுர் செல்லும் சாலையில்) சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திண்டிவனத்திலுருந்து 30 கி.மீ. தொலைவிலும், மேல்மலையனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
- ஆலய நடை திறப்பு நேரம்:
- காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை · மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை
கூகுள் மேப் QR குறியீடு:











